Anonymous said...
கிரிக்கெட் இந்தியர்களின் மனநோய் போல ஆகிவிட்டது.. அதை தெரிந்தே இந்திய அரசு ஊக்குவிக்கிறது....(இந்திய அரசு என்பது பலநிறுவனங்களின் கூட்டமைப்பு தானே....) நீங்கள் ஒன்றை கவனிக்க தவறிவிட்டதாக எனக்குபடுகிறது... தமிழக மீனவர் எப்படி வேண்டுமானாலும் குண்டடிபட்டு சாகலாம்... ஆனால் கிரிக்கெட் விளையாடியவனுக்கும் பார்ப்பவனுக்கும் உள்ள பாதுகாப்பை கவனியுங்கள்... இதை விட கேனை கிறுக்கு நாட்டை நீங்கள் எங்கும் கண்டிருக்கமுடியாது...ஆனாலும் இந்தியா தோற்க்கூடாது... அதுவும் பாகிஸ்தானிடம்... பாகிஸ்தான் தோற்பதற்கு எதுவும் இல்லை.. எல்லாவற்றையும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்து தினமும் சலாம் போட்டு பல்லிளித்து பெரும்பாலான ஏழைகள் கொண்ட தேசம் அது.
நமது இந்திய மீடியாக்கள் பாகிஸ்தானில் வீட்டுக்கு வீடு ஒரு கஸாப் இருப்பதாகவே ஒரு மாயை வைத்து கல்லா கட்டுகிறது...நீங்கள் அல்லது இங்கு வரும் வாசகர்களோ.. எவரெனும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய பாகிஸ்தான் பற்றிய இரண்டு கட்டுரைகளை வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..
மிக வறிய,முட்டாள்தனமான பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் அறிவீர்கள்..இன்றைய நாளில் எதிர்காலமே கேள்விகுறியான தேசம் அது.. நாம் மொஹாலியில் சில ஆயிரம் கொண்ட பாகிஸ்தான பணக்காரர்களை.. அங்குள்ள பெருவாரியான ஏழை பாகிஸ்தானியர்களுக்கும்.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறித்தனத்துக்கும் நுனியளவும் சம்பந்தமில்லை.

No comments:
Post a Comment