Friday, 1 April 2011

ஏற்கனவே அடிவாங்குனது பத்தாதா..?




அதிமுகவுடன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமரசம் செய்து கொண்டதாக,தினமலர் நாளிதழில் இன்று வெளியான செய்தியைக் கண்டு ஆவேசமான,மதிமுக தொண்டர்கள்,கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் அந்த நாளிதழ் பிரதிகளை செருப்பால் அடித்ததுடன்,அதனை எரிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமலர் நாளிதழில் இன்று,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமரசம் செய்து கொண்டதாகவும்,நாளை முதல் தேர்தல் பணியில் ஈடுபடப்போவதாகவும், புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இன்று முட்டாள்கள் தினம் என்பதால்,இது போன்ற செய்தி வெளியிடப்பட்டதாகவும்,அந்த நாளிதழ் தெரிவித்திருந்தது. இதனைக் கண்ட மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் முட்டாள்களாக ஆக்குவதற்கு எங்கள் பொதுச்செயலாளர்தானா கிடைத்தார் என்று ஆத்திரமுற்ற மதிமுக தொண்டர்கள்,தங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து,ஊர்வலமாக வந்து பொள்ளாச்சி மத்தியபேருந்து நிலையம் முன்பாக குவிந்தனர்.தினமலர் நாளிதழுக்கு எதிராக கண்டண முழக்கங்களும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து,அப்பத்திரிகை பிரதிகளை செருப்பால் அடித்ததுடன்,தீயிட்டும் கொளுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்,போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக தொண்டர்கள் 40 பேரையும் கைது செய்தனர்.திடீரென்று நடைபெற்ற இப்போராட்டத்தால்,அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


No comments:

Post a Comment